மகர ராசி சனிப் பெயர்ச்சி 2020 பலன்கள் : ஜென்ம ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும்? | Makaram Sani Peyarchi 2020 Palangal | Sani Peyarchi Palangal 2020 to 2023 Makaram

 

மகர ராசி சனிப் பெயர்ச்சி 2020 பலன்கள் : ஜென்ம ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும்?

மகர ராசி நாதன் சனி பகவன், உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நிகழ்விற்கு ஜென்ம சனி என்று பெயர்.

சனிபகவான் தன் 3ம் பார்வையாக தைரிய, வீரிய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் கர்ம, தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

​கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :

ஜென்ம சனி என்பதால் பல்வேறு வகையில் இன்னல்கள் ஏற்படும். இருப்பினும் இத்தகைய இன்னல்கள், அடுத்து வரும் காலத்தில் பல முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய அனுபவமாக இருக்கும்.

இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம். உங்களின் தனிப்பட்ட ரகசியங்கள், விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கொடுக்கல் வாங்கலிலும், செலவில் கவனம் தேவை. சேமிப்பில் நாட்டம் கொள்வதால் வருங்காலத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

​குடும்பம் :

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைகளுக்கு உகந்தார்போல அனுசரித்து செல்வது அவசியம். தேவையற்ற விவாதங்கள், வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் வீட்டில் பிரச்சினைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

உங்களின் நெருக்கமானவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய சூழல் இருக்கும். வண்டி, வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பேச்சு, செயல்களை குறைத்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து செல்வதால், தம்பதிகளிடையே அன்னியோன்னியம் காக்கலாம்.

ஜென்ம சனி நடப்பதால் அனைத்து வகையிலும் பேச்சை குறைத்து செயலை அதிகரிப்பது அவசியம்.

​பெண்களுக்கான பலன் :

பெண்களுக்கு திருமண யோகம் உண்டாகும். உங்கள் துணைவனுடன் வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது அவசியம். உடன் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். அவர்களின் உண்மை முகம் காண்பீர்கள்.

இளைய சகோதரர் வகையில் சற்று பிரச்னை ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பிறரிடம் நகை, பொருள், பணம் உள்ளிட்டவை வாங்குவதோ, கொடுப்பதோ வேண்டாம். பெண்கள் உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கான பலன்

உங்கள் வேலையில் பல்வேறு வகையில் இடையூறுகள் வரக்கூடும். அலைச்சல்களும், பணிச்சுமையும் ஏற்படக்கூடும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என்பதால், எதையும் கவலைப்படாமல் உங்கள் வேலையை உங்கள் மனசாட்சிக்கு பயப்பட்டு செய்வதே அவசியம்.

உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு கிடைக்காமல் போகலாம். உத்தியோகம் தொடர்பான ஆவணங்கள், ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

​தொழில் செய்பவர்களுக்கான பலன் :

தொழில் செய்பவர்கள் எந்த ஒரு புதிய முதலீடு செய்வதாக இருந்தாலும் பல முறை யோசித்து செய்வது அவசியம். கூட்டு தொழில் செய்பவர்கள் தங்களின் கூட்டாளிகளுடனும், உங்களின் கீழ் வேலை செய்பவர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது அவசியம்.

புதிய தொழில் விருத்தி செய்வதிலும், புதிய செயல்பாடுகளை வியாபாரத்திலி புகுத்துவதற்கு முன் சந்தை நிலவரத்தையும், ஆலோசனையும் தேவை. தொழிலுக்கான கடன் பல வழிகளில் கிடைக்கும் என்றாலும், கடன் வாங்குவதும், கொடுப்பதையும் தவிர்த்தால் நல்லது.

கவனமாக இருக்க வேண்டிய காலம் :

கல்வி

மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். படிப்பில் கூடுதல் கவனமும், விளையாட்டில் முயற்சியும் இருந்தால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும். பெற்றோர், ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று நடந்து கொள்வதால் கல்வியில் முன்னேற்றத்தைக் காணமுடியும்.

கவனமாக இருக்க வேண்டிய காலம் :

சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.

சனி பகவான் 29.03.2023ம் தேதி முதல் 24.08.2023ம் தேதி வரை சனி பகவான் அதிசார நிலையாக ராசிக்கு 2ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார்.

தற்போது ஜென்ம ராசி நடப்பதோடு, அதிசார நிலையால் 2ம் இடத்திற்கு செல்லும் போதும் கவனமுடன் இருப்பது அவசியம். மனைவியின் உடல் ஆரோக்கியத்திலும், புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

​பரிகாரம்:

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. உங்களின் குல தெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதால் உங்கள் மனக்குறை தீரும். இன்மையிலும் நன்மை கிடைக்கும்.

 அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

Related Posts

கருத்துரையிடுக