கன்னி ராசிக்கு பஞ்சம சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 எப்படி இருக்கும்? | Kanni Rasi Sani Peyarchi Palangal 2020 tamil | Sani Peyarchi Palangal tamil | Information in tamil

 

கன்னி ராசிக்கு பஞ்சம சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 எப்படி இருக்கும்?

கன்னி ராசிக்கு இதுவரை அர்த்தாஷ்டமச் சனி இருந்தது. இதனால் பல கஷ்டங்கள், சோதனைகள், நோய்கள் கொடுத்திருந்தது. தாய்க்கு உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சினைகள் கொடுத்தது. வாகன பிரச்சினை, விபத்து, வாகனம் தொலைதல் என பல்வேறு செலவுகளை கொடுத்திருந்தது. பலர் தங்களின் வேலை இழக்க நேரிட்டது. தற்போது அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபட்டு பஞ்சம சனி வர உள்ளது. கன்னி ராசிக்கு பஞ்சம சனி எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்...

சனிப் பெயர்ச்சி 2020 எப்போது?

தமிழகத்தில் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என இருவகை பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. திருத்தப்பட்ட புதிய பஞ்சாங்க முறை திருக்கணித பஞ்சாங்கம் என்றாலும் பெரும்பாலான ஜோதிடர்கள், கோயில்களில் வாக்கிய பஞ்சாங்கத்தையே பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 2020 ஜனவரி 24ம் தேதி நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் நிலையில், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) அதிகாலை 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து மகர ராசியில் இருக்கும் உத்திராடம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

கன்னி ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம சனி பலன்களைத் தர உள்ளார்.

கன்னி ராசிக்கு ​பஞ்சம சனி என்ன செய்யும்?

சனி பகவான் ஒரு ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய அமைப்பிற்கு பஞ்சம சனி என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சம சனி நடக்கக்கூடியவருக்குத் தெளிவற்ற சிந்தனையும், எப்போதும் மனதில் சில தேவையற்ற குழப்பமான நிலை ஏற்படும் என்பதால் அவரால் சரியான தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத நிலையிலேயே இருப்பார் என்பதால் தான் நினைத்த காரியத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்.

பலரின் பழிச்சொல்லுக்கும், வீண் பழியும் ஏற்படக்கூடும்.

பஞ்சம சனி உள்ளவரின் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம்.

பஞ்சம சனி பலன்களை பெறக்கூடிய ராசியினருக்கு பெரியளவில் தீய பலன்களை ஏற்படுத்தமாட்டார். அதிக மோசமற்ற, அதிக நன்மைகளற்ற மத்திம தீவினை பலன்களை ஏற்படுத்துவார். இதனால் ஓரளவு பொருளாதார நிலை சிறக்கும்.

​கன்னி ராசிக்கு சனி பகவான் தரும் பொது பலன்

சனி பகவான் இந்த முறை கன்னி ராசிக்கு 4ம் இட அர்த்தாஷ்டம சனி நிறைவடைந்து, 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பஞ்சம சனி ஆரம்பமாகிறது.

சனி பகவானின் 3ம் பார்வையால் சம சப்தா ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தையும், தனது 10ம் பார்வையால் குடும்பம், தன வாக்கு ஸ்தானத்தை பார்க்கிறார்.

இதனால் கன்னி ராசியினர் மற்றவர்களுடன் பேசும் பேச்சிலும், செய்யும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களால் முடிந்த விஷயத்திற்கு மட்டும் வாக்களிக்கவும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதில் கவனம் வேண்டும்.

நண்பர்கள், உறவினர்களுடனான உறவு சிறக்க அனுசரித்து செல்வது அவசியம். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியதோடு, கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் மிக கவனமாக இருப்பது நல்லது. உங்களின் பல கால ஆசைகள் நிறைவேறக்கூடும்.

​உத்தியோகஸ்தர்களுக்கு

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்காகப் பழகுங்கள். உங்களின் அடுத்தடுத்த செயல்பாடுகளையோ அல்லது ரகசியங்களையோ பகிரந்து கொள்ள வேண்டாம். பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவும் ஏற்படும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் விரும்பிய பலன்கள் பெற காலதாமதம் ஆகலாம். உடல் ஆரோக்கிய பிரச்னை காரணமாக வேலையில் தாமதம் ஏற்படலாம்.

​தொழில் / வியாபாரம்

எந்த ஒரு பெரிய முயற்சி, முதலீடுகள் செய்வதற்கு முன் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வதும், மூத்தவர்கள் மற்றும் தொழிலில் சிறந்து விளங்குபவர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்ல பலனைத் தரும். உங்களின் முயற்சி செயல்பாடுகளுக்கு நல்ல லாபம் ஏற்படும்.

யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். சிலருக்கு வெளிநாடு செல்லுதல் அல்லது வெளிநாடு பயணங்கள் தொடர்பான சாதக பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட முயற்சிகள், ஒப்பந்தங்கள் சாதக முடிவுகள் கிடைக்கும்.

பெண்கள் / கல்வி

பெண்கள்

குழந்தை பாக்கியம் உண்டாகும். சுய தொழில் செய்யக்கூடிய பெண்களுக்கு யோகம் உண்டாகும். உறவு வகையில் திருமணத்திற்கான வரன் கிடைக்கலாம். பூர்விக சொத்து பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நிதான போக்கை மேற்கொள்வது அவசியம்.

கல்வி :

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சோம்பேறித்தனம் போக்கி படிப்பில் கவனம் செலுத்த மந்தநிலை குறையும். மேல்படிப்பில் வெற்றி கிடைக்கும் அதே போல் சில படிப்புகளால் பதவி உயர்வு பெற நல்வாய்ப்பு அமையும்.

​அரசியல் / கலைத் துறை

அரசியலில் பெரிய இடத்திற்கு முன்னேறவும், பெரிய தலைவர்களின் சந்திப்பும், வாய்ப்புகளும் கிடைக்கும். என்ன தான் பலரின் ஆதரவு கிடைத்தாலும், உங்களின் பேச்சை குறைத்துக் கொள்வதும், கவனமாக பேசுவது அவசியம். உங்களின் ரகசியத்தைப் பாதுகாப்பது நல்லது.

கலைஞர்கள் உங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கான அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமும், அலைச்சலும் உண்டாகும். புதிய முதலீடுகளை செய்வதற்கு முன் ஆலோசனை தேவை.

​பரிகாரம் :

திருப்பைஞ்ஞிலி சென்று எம்தர்ம ராஜாவை வழிபட்டு வருவதால், ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும்.

ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்வதும், பசியாற்றுவது நல்லது.

பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு காப்பரிசி சமர்ப்பித்து வழிபடுவதால் உங்களின் தொழில், உத்தியோக தடை நீங்கி பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.

கடவுளை வணங்குவது, நியாயமாக நடந்து கொள்ளுதல், எந்த ஒரு வேலை செய்தாலும் முழு சிரத்தையுடன் செய்வது நல்லது.

 அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

 

 

Related Posts

கருத்துரையிடுக