Rishaba Rasi Sani Peyarchi Palangal 2020 to 2023 | அஷ்டம சனி நீங்கி அதிர்ஷ்ட பலனைப் பெற உள்ள ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் 2020

 

Rishaba Rasi Sani Peyarchi Palangal 2020 to 2023 | அஷ்டம சனி நீங்கி அதிர்ஷ்ட பலனைப் பெற உள்ள ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் 2020

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப் பெயர்ச்சி சார்வரி வருடம் மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து மகர ராசியில் உள்ள உத்திராடம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கடந்த 2020 ஜனவரி 24ம் தேதி சனி ஏற்கனவே மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாக குறிப்பிடப்படுகிறது.

சனி பெயர்ச்சி எப்போது?

வாக்கிய பஞ்சாங்க சனி பெயர்ச்சி 2020 படி இதுவரை ரிஷப ராசிக்கு 8ம் இடமான அஷ்டம சனியாக அமர்ந்து சொல்ல முடியாத துன்பங்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது நடக்க உள்ள பெயர்ச்சி நிகழ்வில் ரிஷப ராசிக்கு 9ம் இடமான பாக்கிய சனியாக அமர்ந்து யோக பலன்களை அள்ளி கொடுக்கப்போகிறார்.

சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 ஆண்டுகள் வீதம் ஒரு சுற்றை முடிக்க 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இதில் ஏழரை சனி நடக்கும் 7 1/2 ஆண்டுகளும், அஷ்டம சனி நடக்கும் 2 1/2 ஆண்டு காலத்தில் மிகவும் அதிக சங்கடங்கள், கஷ்டங்களையும், அர்த்தாஷ்டம் சனி காலத்தில் குறைந்த கஷ்டங்களை கொடுத்து சோதிப்பார்.

சனி பகவான் 3, 6,11 இடங்களில் அமரும் ஏழரை ஆண்டு காலங்களில் மட்டும் தான் உச்சபட்ச நற்பலன்களை வாரி வழங்குவார். ராசிக்கு மற்ற நிலைகளில் இருக்கும் போது சுமாரான பலன்களைத் தான் வழங்குவார்.

அந்த வகையில் ரிஷப ராசிக்கு அஷ்டம சனி விலகுவதால் பெரிய கஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

​சிறப்பான பலன் கொடுக்கும் குரு :

சிறப்பான பலன் கொடுக்கும் குரு :

கடந்த குரு பெயர்ச்சியின் போது குரு மகர ராசிக்கு சென்றார். தற்போது அதே இடத்தில் சனி பகவானும் வந்து அவரின் சொந்த வீட்டில் சஞ்சரிக்க உள்ளார்.

சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் நிலையில், குரு மகரத்தில் நீச்சம் பெற்றாலும், நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படும்.

குரு பகவானும் பாக்கிய குருவாக ரிஷப ராசிக்கு அமர்ந்து தனது 5ம் பார்வையால் மிக சிறப்பான யோக பலன்களை அளித்து வருகின்றார்.

மகரத்தில் குருவும், சனியும் சேர்ந்திருப்பதால் உண்டாகும் யோகத்திற்கு தர்ம கர்பாதி யோகம் என்று பெயர்.

உத்தியோகத்தில் உயர்வு

வசதி வாய்ப்புகள் வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதற்கான வாய்ப்புகளும் அதற்கான வசதிகளும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வந்து சேரும்.

உயர் அதிகாரிகள் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கும். இழந்த வேலை கிடைக்கவும் அமோகமான காலமாகும்.

உங்களுக்கு பரிசு, பாராட்டு, விருதுகள் பெறுவதற்கான சிறப்பான காலமாக இருக்கும்.

​தொழில் முன்னேற்றம்

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிக சிறந்த காலமாக இருக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவர்களின் ஜனன கால ஜாதக தசா புத்தி மற்றும் அதில் உள்ள குரு சனி இடங்களை ஆராய்ந்தும், ஜோதிட ஆலோசனை, சந்தை நிலவரத்தை ஆராய்ந்து தொடங்க வெற்றி பெறும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த கடன் பிரச்னைகள் தீர்வதோடு, புதிய நுகர்வோர்களைப் பெறுவீர்கள். நல்ல அனுபவ வேலையாட்களைப் பெறுதல், நம்பிக்கையான வியாபாரம் நடத்தல் போன்ற எல்லா விஷயங்களும் சிறப்பாக நடக்கும்.

9ம் இடத்தில் சனி அமர்வதால் உங்கள் ராசிக்கு சுற்றுலா, ஆன்மிக பயணங்கள் போன்ற பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது.

தந்தையுடனான பிரச்னைகள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

பெண்களுக்கான பலன்கள்:

பெண்களுக்கு அஷ்டம சனி முடிவதால் மாதவிடாய் கோளாறுகள், சிறு வாகன விபத்து, வீண் செலவு என பிரச்னைகள் வந்து போகும்.

அதே சமயம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் முன்னெடுத்த பணிகளில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலகம் செல்பவர்களுக்கு பதவியும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அருமையான காலமாக இருக்கும். துணையுடனான மன கசப்பு நீங்கி அன்பும், தாம்பத்தியமும் இனிக்கும்.

​பரிகாரம்

சனி பகவான் சிறப்பு ஆலயமான திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரர் கோயிலில் இருக்கும் நள தீர்த்தத்தில் நீராடுவதும், தர்ப்பணேஸ்வரர், சனிபகவானை வழிபட்டு வருவது மிக நல்ல பலனையும், முன்னேற்றத்தையும் தரும்.

சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு அருகம் புல் மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.

அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

Related Posts

கருத்துரையிடுக