தனுசு சனி பெயர்ச்சி 2020: பாத சனி பலனை அனுபவிக்க உள்ள தனுசு ராசி! | Danushu Sani Peyarchi Palangal 2020-2023 | Sani Peyarchi Palangal 2020 tamil | Information in tamil

 

தனுசு சனி பெயர்ச்சி 2020: பாத சனி பலனை அனுபவிக்க உள்ள தனுசு ராசி!

சனி பெயர்ச்சி 2020 : வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி மாதம் 12ம் தேதி (டிசம்பர் 27) அதிகாலை 5.22 மணிக்கு நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் போது சனி கிரகம் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகரத்தில் உள்ள உத்திராடம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.


ஒரு ராசிக்கு 2ம் இடமான தன, வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் நிலை பாத சனி என்று பெயர். இந்த பதில்வில் தனுசு ராசியினர் பாத சனி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

​சனியின் பார்வை பலன்:

சனி பகவான் தன் 3ம் பார்வையால் சுக, தாயார் ஸ்தானத்தைப் பார்க்கிறார். 7ம் பார்வையால் ஆயுள் ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

பொது பலன் :

பாத சனி நடக்கும் போது அவரின் குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் திருமணம் அல்லது குழந்தைப் பேறு மூலமாக அதிகரிக்கும். அதனால் இந்த அமைப்பின் போது பலருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

எந்த ஒரு செயலையும் நம்பிக்கையும், விடாமுயற்சியுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள்.

ஏழரை சனியின் இறுதி நிலையாக பாத சனி வருகிறது. ஏழரை சனியின் ஜென்ம சனி, விரய சனியை விட குறைவான கெடுபலனைத் தான் பாத சனி நடக்கும் போது பெறுவார்கள்.

அதனால் தனுசு ராசியினர் அடுத்த 2 1/2 ஆண்டுகளுக்கு சற்று கவனமாக இருப்பதால் தேவையற்ற இழப்பு, விரயம் நிகழாமல் தவிர்க்கலாம்.

​குடும்பம் :

உங்களின் குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வயதில் உள்ள இளைஞர், இளைஞிகளுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை பேற்றுக்கான சிகிச்சை எடுக்க சிறந்த காலம். பிள்ளைப் பேறு கிடைக்கும். பொருளாதார நிலையில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் பெற ஆரம்பிக்கும். தேவையற்ற வாக்குறுதிகளை அளிப்பதும், யாருக்காகவும் ஜாமின் கையெழுத்துப் போட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் :

இதுவரை உத்தியோகத்தில் இருந்த தடங்கல்களும், மன சங்கடங்களும் தீரும். மேலதிகாரிகள் அனுசரித்து செல்வார்கள். உங்களுக்கான முன்னேற்ற நிலையைப் பார்க முடியும். உத்தியோகம் தொடர்பான உதவிகளை உங்கள் சக பணியாளர்கள் செய்வார்கள். மேலதிகாரிகளின் வழிகாட்டுதலால், உங்கள் இலக்கை அடைவீர்கள்.

அதனால் உங்கள் துறையில் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் விரும்பியபடி அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

தொழில்

தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளை செய்வதில் அதிக கவனம் தேவை. சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வதும், துறை ரீதியான ஆலோசனைப் பெறுவதும் அவசியம்.

தொழிலில் பொறுமையுடன் அனுகுவது அவசியம். சிலருக்கு உங்களின் சேமிப்பு தொழில் விரிவு படுத்துதல், புதிய தொழில் தொடங்குதல் போன்ற சுப விரயமாக மாறக்கூடும். உங்கள் வேலையாட்களை பொறுமையுடன் கையாண்டால் உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். தொழிலில் போட்டிகள் குறையும். வெளியூர், வெளிநாடு தொடர்பான தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு :

திருமணம், குழந்தைப் பேறுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு விரைவில் நல்ல தகவலைக் கேட்பீர்கள். தொழில் செய்யக்கூடிய பெண்கள் நிதானத்தைக் கடைப்பிடித்தால் முன்னேற்றம் பல மடங்காக இருக்கும். இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல நல்ல பெயர் கிடைக்கும். துணைவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

நல்ல பலனும், கெடுபலனும் கிடைக்கக்கூடிய காலம் :

நல்ல பலனும், கெடுபலனும் கிடைக்கக்கூடிய காலம் :

சனி பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் 27/12/2020 அன்று பெயர்ச்சி ஆவதால் எந்த விஷயத்திலும் தைரியத்துடன் களமிறங்குவீர்கள். தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சனி பகவான் 11.5.2021 முதல் 26.09.2021வரை வக்ர நிலைக்கு செல்வதால் பொருள் இழப்பும், தேவையற்ற விரய செலவு ஏற்படுதல், சில முயற்சிகளில் தோல்வி ஏற்படும். இந்த காலங்களில் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

சனி வக்ர பலன்

உங்கள் அஷ்டமதிபதியான சந்திர பகவான் ஆட்சி செய்யக்கூடிய திருவோண நட்சத்திரத்தில் 28/12/20203 முதல் 26/01/2023 வரை சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் பொருளாதார பின்னடைவு ஏற்படும். காரிய தடை, திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படக்கூடும்.

25/05/2022 முதல் 9/102022ம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலைக்கு செல்வதால் பலவகையில் நல்ல பலன்கள் வாரி வழங்குவார்.

ராசிக்கு பூர்வ புண்ணிய அதிபதியான செவ்வாய் அதிபதியாக கொண்ட அவிட்ட நட்சத்திரத்தில் 27/10/2023 முதல் 23/10/2023 வரையில் சஞ்சரிக்ககூடிய காலத்தில் புதிய வீடு, மனை, அசையும், அசையா சொத்துக்கள் சேர்க்க முடியும்.

25/05/2022 முதல் 9/10/2022 வரை வக்ர நிலையில் செல்வதால் அனைத்து வகையிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணம் பல வகையில் விரயம் செலவாகும்.

​பரிகாரம் :

திருவாரூர், அக்னீஸ்வரர் பொங்கு சனீஸ்வரர் திருக்கோவில், திருக்கொள்ளிக்காடு ஆலயத்தில் வழிபட்டு வருவது மிக நல்ல பலனைத் தரும்.

சனிக்கிழமைகளில் அனுமனையும், சனி பகவானையும் வழிபட்டு வர உங்கள் குறை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

Related Posts

கருத்துரையிடுக