கும்ப ராசிக்கு விரய சனி பெயர்ச்சி பலன் 2020 எப்படிப்பட்ட பலனைத் தரும்? - ஏழரைச் சனி முதல் நிலை எதில் கவனம் தேவை? | Kumbam Sani Peyarch palangal 2020-2023

 

கும்ப ராசிக்கு விரய சனி பெயர்ச்சி பலன் 2020 எப்படிப்பட்ட பலனைத் தரும்? - ஏழரைச் சனி முதல் நிலை எதில் கவனம் தேவை?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த சனி பெயர்ச்சியின் போது தனுசுவில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து, மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு விரய சனியாக வர உள்ளார். கும்ப ராசிக்கு இப்போது தான் ஏழரை சனி தொடங்க உள்ளதால் அனைத்து வகையிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.




கும்ப ராசிக்கான பொது பலன்கள்

சனி பகவான் ராசிக்கு 12ம் இடமான அயன, சயன, போக ஸ்தானத்தில் அமர்ந்து விரய சனியாக நிற்பதால், கும்ப ராசியினருக்கு திருமண பாக்கியம், வீடு, மனை, பழைய வீடு புதுப்பித்தல் போன்ற சுப விரய பலன்களை செய்வதன் மூலம், உங்களுக்கு ஏற்படக்கூடிய வீண் விரய செலவுகள், உங்களுக்கு முதலீடுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகளின் பட்டியலில் ஒன்றாக கும்ப ராசியினர் உள்ளனர். உங்களின் கடின உழைப்பால், தன்னம்பிக்கையால் மட்டும் காரிய தடைகளிலிருந்து விடுபட முடியும்.

என்ன தான் நிதி நிலை சற்று மோசமானதாக இருந்தாலும், உங்களின் கடன் சுமை குறையும், நிதி தொடர்பான பிரச்னைகள் குறைந்து வாழ்வில் சில நல்ல முன்னேற்றம் ஏற்படத்தான் செய்யும்.

கும்பம் பொது பலன்கள்

சனி பகவான் தனது 3ம் பார்வையால் குடும்பம், தன, வாக்கு ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் ரண, ருண, ரோக, பகை ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் பாக்கிய, தந்தை ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

நகைகள், அதிக பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், பணத்தை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் மனதில் குழப்ப நிலை ஏற்படும். அதனால் நீங்கள் திட்டமிட்ட செயல்களை செய்துமுடிப்பதில் தடுமாற்றமும், காலதாமதமும் ஏற்படலாம்.

உத்தியோகம் உள்ளிட்ட உங்களின் செயல்பாடுகளில் சிலரால் இருக்கமான நிலை இருக்கும். சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று மனம் துடிக்கும். மனதில் குழப்பநிலை இருக்கும். உங்களின் மனக்குறையை குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள, மனதில் இருக்கும் குழப்ப நிலை தீரும்.

​உத்தியோகஸ்தர்களுக்கான பலன் :

உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலம். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். உங்களுக்கான பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கக்கூடும். உங்களின் மேலதிகாரிகள் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கும்.

உங்கள் வேலையில் இருக்கும் பிரச்னைகள் குறித்து வெளிநபர்களிடமும், மேலதிகாரிகள் குறித்து மற்றவர்களிடம் குறை கூறுவதை தவிர்ப்பது அவசியம். உத்தியோகத்தில் உயர்வு பெற உங்கள் துறை சார்ந்த படிப்புகளைப் படிப்பது நல்லது.

உங்களின் வேலையை, பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

​தொழில் /வியாபாரம்

உங்கள் தொழில் கூட்டாளிகளுடன் அவ்வப்போது மோதல் போக்கு கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.. உங்கள் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள், நுகர்வோர்கள் கிடைப்பதில் தாமதமாகும். புதிய சலுகைகளை அறிவித்து புதிய வாக்கையாளர்களை கவர்வீர்கள். உங்கள் தொழிலுக்கான கடன் உதவிகள் கிடைப்பதில் சாதகமான நிலை இருக்கும். இருப்பினும் கடன் பெறுவதில் கவனம் வேண்டும்.

தொழில் வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபார விஷயமாக திடீர் பயணங்களும், அதனால் அலைச்சல்களும் ஏற்படலாம்.

வியாபாரிகள் சந்தை நிலையை அறிந்தும், துறை ரீதியான அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனைப் பெற்று புதிய முதலீடுகளைச் செய்யவும். போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் அதையும் தாண்டி ஓரளவு லாபத்தைச் சம்பாதிப்பீர்கள். உங்களின் வேலையை, பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

பெண்களுக்கான பலன்:

பெண்களுக்கு குடும்பத்தில் பல்வேறு வகையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். அடகு வைத்த ஆபரணங்களை மீட்பீர்கள்.

குடும்ப நபர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். குடும்ப பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிரந்து கொள்ள வேண்டாம். பேச்சு, செயலில் கவனம் தேவை. கோபத்தை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவுகளை தவிப்பது அவசியம்.

மாணவர்கள் :

கல்வியில் கவனத்துடன் படிப்பது அவசியம். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் பார்வை தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். முழு கவனத்துடன் படித்தால் மட்டும் நீங்கள் நினைத்த மதிப்பெண் பெற முடியும். தேவையற்ற பழக்கங்களைக் கொண்ட நண்பர்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது அவசியம். நண்பர்களுடன் வெளி இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பாடங்களை மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொள்ளவும்.

​பரிகாரம் :

அருகில் உள்ள சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று வணங்கி வரவும்.

சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடு, கணபதி வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைத் தரும்.

உங்களால் முடிந்தளவு ஏழை எளியோருக்கு உதவிகளை செய்வதால் உங்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி, உங்களுக்கும் குடும்பத்திலும் மங்கலகரமான் சூழல் ஏற்படும்.

அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

Related Posts

கருத்துரையிடுக