துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023: அர்த்தாஷ்டம சனி என்ன செய்யும்? | Sani peyarchi palangal 2020 tamil | Sani peyarchi palangal thulam rasi |Information in tamil

 துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023: அர்த்தாஷ்டம சனி என்ன செய்யும்?

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப் பெயர்ச்சி மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) நிகழ உள்ளது. இதில் சனி பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் 2ம் பாதத்திற்கு பெய்ர்ச்சி ஆக உள்ளார். துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடக்க உள்ளதால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறுவார்கள், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்

துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி

துலாம் ராசிக்கு இதுவரை 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி 4ம் இடத்தில் சனி சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் தொழிலில் அலைச்சலும், சோம்பேறித்தனமும் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை.

சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து தனது 3ம் பார்வையால் ருண, ரோக, எதிரி ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் தொழில், கர்ம ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் உங்களில் ஜென்ம ராசியைப் பார்க்கிறார்.

​குடும்பம்

தாயின் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு, மன தாங்கல் அவ்வப்போது ஏற்பட்டு மீண்டும் ஒன்று சேரக்கூடிய நிலையும், மனநிம்மதியும் ஏற்படக்கூடும்.

சகோதரர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவான அமைப்பு ஏற்படும். உறவினர்கள், நண்பர்களிடம் தேவையற்ற உங்களின் கருத்துக்கள், உங்களின் செயல்பாடுகளை பகிரந்து கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லுதல், சுற்றுலா செல்லுதல் போன்ற மனதிற்குப் பிடித்த நிகழ்வுகள் நடக்கும். ஆன்மிக சுற்றுலாவாகக் கூட அமையும்.

​உத்தியோகஸ்தர்கள்

பணி தொடர்பான கோப்புகளை கவனமாக கையாளவும். உங்கள் வேலையை நீங்கள் விரும்பி செய்தால் நிச்சயம் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். தற்காலிக வேலை நிரந்தர வேலையாக நல்வாய்ப்பு உண்டு. உங்களின் உழைப்பு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

 

வேலையில் பல தடைகள் வந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் உங்கள் முயற்சிகளையும், புதிய திறமைகளை வெளிகொண்டு செய்து வர முன்னேற்றமான பல வாய்ப்புகள் ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான வேலையில் உள்ளவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

​தொழில்/வியாபாரிகளுக்கு:                                                                

சுய தொழில் செய்பவர்கள் மேன்மையான நிலையை அடைய, பொருளாதாரம் உயர அதிகம் கஷ்டப்பட வேண்டி இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் சில சங்கடங்கடங்களுக்கு பின் நல்ல பலனைத் தரும்.

உங்கள் வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தொழில் முன்னேற்றம் நிச்சயம்.

தொழில், வியாபாரம் சார்ந்த கடனுதவி கிடைக்கும். இருப்பினும் கடன் வாங்குவதற்குமுன் நன்றாக பல முறை யோசித்து செயல்படவும். வியாபாரத்திற்கான இடங்களை மாற்றி அமைக்கும் போதும் கவனம் தேவை. உங்களின் புதிய தொழில் முயற்சி நிச்சயமற்ற நிலை இருக்கும் என்பதால், கவனமாக செயல்படவும்.

​பெண்களுக்கு :

பெண்கள் அழகுக்காக உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம். நேரத்திற்கு சரியான அளவு உணவை எடுத்துக் கொள்ளவும். சுய தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படவும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

கல்வி

மாணவர்கள் கல்வியில் நினைத்தளவு நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும். இருப்பினும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். வெளிநாட்டு படிப்பிற்கு முயற்சிக்கும் மாணவர்கள் கவனமாக தேர்வு செய்யவும்.

வேளாண்மை

மழை வளம் சிறப்பாக இருக்கும் என்பதாலும் நீர் நிலை உயர்வாக இருக்கும். அதனால் நீர் பிரச்னை இன்றி விவசாயம் சிறப்பாக நடக்கும். நீங்கள் நினைத்த அளவு உற்பத்தியை செய்ய முடியும். எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உங்கள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.

ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வதும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு பொருளாதார உதவி செய்வதும் நல்லது.

 அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

 

Related Posts

கருத்துரையிடுக