⛈️ வானிலை எச்சரிக்கை: மிக கனமழை காரணமாக காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
Half yearly Exam Time table 2025 Tamil nadu Download PDF அரையாண்டு தேர்வு அட்டவணை 2025
🌧️ முக்கிய வானிலை முன்னறிவிப்பு
பொதுவான மழை: கடலோரத் தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் திங்கட்கிழமை (17/11/25) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யலாம்.
கனமழை வாய்ப்புள்ள மற்ற பகுதிகள்: கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
🏫 காரைக்காலில் விடுமுறை அறிவிப்பு
மிக கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை திங்கட்கிழமை (17/11/25), காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது"
Today Leave News 17.11.2025
Whatspp Chennel : https://whatsapp.com/channel/0029VaEh4h0Jf05UU5nIsw2L
Social Plugin