கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

 

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

மாமல்லபுரம்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார்.

  • அவர்களிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து இருக்கிறார்.

த.வெ.க. கட்சித் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் பிரசாரம் செய்தார்.

  • கடந்த செப். 27ம் தேதி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

  • கரூரில் நடந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்.

  • இறந்தவர்களின் குடும்பத்தினரை, விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது.

தவிர்ப்பு மற்றும் சந்திப்பு:

  • பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் நேரடி சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

  • இச்சூழலில், இறந்தவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவெடுத்து, அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.

இன்று நடந்த சந்திப்பு (அக் 27):

  • இன்று (அக் 27) கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.

  • அப்போது உயிரிழந்தோர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்தார்.


Post a Comment

Previous Post Next Post