தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

அரசு முத்திரைத்தாள் விற்பனையாளர் உரிமம் பெறுவது எப்படி

 அரசு முத்திரைத்தாள் விற்பனையாளர் உரிமம் பெறுவது எப்படி...?


நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக தேவையை பொறுத்து காலியிடம் இருந்தால் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.


💥 முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள்  கீழ்கண்டவாறு:-


* எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


* 18 வயது முதல் உச்ச வயதில்லை. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதிக்கான  தாசில்தார் வழங்கிய இருப்பிடச் சான்று, உடல் தகுதி காண்(கண் பார்வை நிலை உட்பட).


* அரசு டாக்டர் வழங்கிய சான்று, சொத்து மீதான செல்வ நிலை சான்று(தாசில்தார் வழங்கியது).


* பிணையமாக காட்டப்படும் சொத்து மீது வில்லங்கம் இல்லையென உரிய பதிவு அலுவலர் வழங்கிய சான்று

ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். 


* முன்னாள் ராணுவத்தினர், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் (உரிய சான்று வழங்கியது) ஆதி திராவிடர், பழங்குடியினர் (தாசில்தார் வழங்கியது) விதவைகள்(தாசில்தார் வழங்கியது) ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


💥 விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:-


* போதிய கல்வித்தகுதி, முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வநிலை சான்று (solvency certificate) விபரங்களுடன் விண்ணப்பங்கள் இருத்தல் வேண்டும்.


* முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் கோரி ஒவ்வொரு மாவட்ட பதிவாளருகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சார்பதிவகங்களில் உள்ள இடங்களில் வெளியிடப்பட வேண்டும். 


* அவ்வாறு வெளியிடப்படும் அறிவிப்புகள் மாவட்ட பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவகங்கள், கிராமச்சாவடி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சார் ஆட்சியர்/கோட்டாட்சியர் அலுவலகம், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கிராம செயல் அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஓட்டி விளம்பரப்படுத்தப்படும்.


* விண்ணப்பங்களை பரிசீலித்து முழு விவரங்களற்ற விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.


* தகுதியுள்ள நபர்களுக்கான நேர்முகத்தேர்வு அழைப்பு கடிதம் அனுப்பு் போது, நேர்முக தேர்விற்கு குறைந்தபட்சம் 1 வாரம் முன்னதாக அஞ்சல், விண்ணப்பதாரர்களை சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.


* நேர்முகத்தேர்வின் போது அசல் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.


* நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் நியமனம் செய்யப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்படும்.


* முத்திரைத்தாள் விற்பனையாளர் நியமனம் செய்யப்பட்டபின், நியமனம் செய்யப்பட்டோரின் முழு விவரம் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு உயர் அலுவலர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

Related Posts

கருத்துரையிடுக